அன்னை ராபியா அறக்கட்டளையின் ஓர் அங்கமான ஹிக்மத் அகாடமி மூலம் மாணவ/மாணவியர்களுக்கான கல்வி கருத்தரங்கம் 04-05-2025 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணியளவில் அகாடமி வளாகத்தில் வைத்து நடத்தப்பட்டது
மாணவி H. அஃப்ரின் இறைவசனங்களை ஓத விழா இனிதே துவங்கியது. ஹிம்கத் அகாடமியின் நிர்வாக இயக்குநர் ஹாஜி. A. அபுதாஹீர் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட நமது மண்ணின் மைந்தர் முனைவர். அப்துல் காதிர் M.Sc., M.Phil., PGDCA., Ph.D., அவர்கள் அற்புதமனதொரு உரையை வழங்கினார்.
ஹிக்மத் அகாடமியின் வளர்ச்சியிலும், நம் ஊர் மாணவ/மாணவியர்களின் முன்னேற்றத்திலும பெரிதும் அக்கறை கொண்ட ஹாஜி. M. செய்யது சுல்தான இப்ராஹிம் B.Com., மாணவ/மாணவியரை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மேற்படிப்பு குறித்த மாணவர்களின் கேள்விக்கு உரிய விளக்கமும், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஹிக்மத் அகாடமி நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
ஹிக்மத் அகாடமியின் செயல்திட்ட இயக்குநர் ஜனாப். A. செய்யது M.Com., நன்றியுரை ஆற்றினார்.
இக்கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும், ஆங்கில மொழியின் அவசியம் குறித்த புரிதலையும், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலையும் சிறப்பான முறையில் வழங்கியதாக மாணவ/மாணவியர் கருத்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் அழைப்பிதழ் & புகைப்படங்கள்
0 comments:
Post a Comment