அன்னை ராபியா அறக்கட்டளை

நிகழ்வுகள்

நிகழ்வு -5

 ஆண் ஹஜ் பயணிகளுக்கான வழிகாட்டு முகாம்

இறையருளால் இந்த ஆண்டு புளியங்குடியிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆண்களுக்கான வழிகாட்டு மற்றும் ஆலோசனை முகாம் 23-04-2025 புதன் கிழமை இரவு 9 மணி அளவில் ஹிக்மத் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு ஹிக்மத் அகாடமியின் செயல்திட்ட இயக்குநர் ஜனாப் A. செய்யது M.Com., தலைமை தாங்கினார். ஹிக்மத் அகாடமியின் நிர்வாக இயக்குநர் ஹாஜி. A. அபுதாஹீர், 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி. MMY முகம்மது நயினார் MC, ஜனாப் M. ஷேக் காதர் மைதீன் MC, அல்மாஸ் கன்ஸ்ட்ரக்ஸன் ஜனாப். A.செய்யதலி, ஜனாப். S.லெப்பை முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு ஆண் ஹஜ் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.  

இத்துடன் ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகளின் சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கம் அளித்தனர். மேலும் ஹஜ் பயண ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

 ஹிக்மத் அகாடமி ஏற்பாடு செய்திருந்த இம்முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தாக இம்முகாமில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். 



 ------------------------------------------------------------------------------------------

நிகழ்வு -4

பெண் ஹஜ் பயணிகளுக்கான வழிகாட்டு முகாம்

இறையருளால் இந்த ஆண்டு புளியங்குடியிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பெண்களுக்கான வழிகாட்டு முகாம் 20-04-2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில் ஹிக்மத் அகாடமி வளாகத்தில் நiபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் ஹாஜிமா. S. செய்யது ஆயிஷாள், ஹாஜிமா. M. கதிஜத்துல் குபுரா B.Tech., ஹாஜிமா. M. செய்யது அலி பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு ஹஜ் பயணத்தின் போ துகடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். 

ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகளின் சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கம் அளித்தனர். ஹிக்மத் அகாடமி ஏற்பாடு செய்திருந்த இம்முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தாக இம்முகாமில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். 


--------------------------------------------------------------------------------------------------------------------

நிகழ்வு -3

ஹிக்மத் அகாடமி நடத்தும் கட்டணமில்லா SPOKEN ENGLISH பயிற்சிக்கான தொடக்க விழா

ஹிக்மத் அகாடமி நடத்தும் கட்டணமில்லா  SPOKEN ENGLISH பயிற்சிக்கான தொடக்க விழா 14-04-2025 திங்கட்கிழமை அன்று இறையருளால் சிறப்பாக நடந்தேறியது. H. அஃப்ரின் இறைவசனங்களை ஓத விழா இனிதே துவங்கியது. 

ஹிம்கத் அகாடமியின் நிர்வாக இயக்குநர் ஹாஜி. A. அபுதாஹீர் வரவேற்புரை ஆற்றினார். ஹிக்மத் அகாடமியின் செயல்திட்ட இயக்குநர் ஜனாப். A. செய்யது M.Com.,  துவக்க உரை ஆற்றினார். மீராசா அஹ்லுஸ் சுன்னத் மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டியின் தலைவர்  அல்ஹாஜ். P.N.M. மௌலல் கௌமி M.E., தலைமை தாங்கினார். 

ஜமாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ். A. காஜா முகைதீன், சென்னை MM மொபைல்ஸ் & ஆபிதா மொபைல்ஸ் உரிமையாளர் ஹாஜி. T. முகம்மது முஸ்தபா (மைனா) , நியூ கிரஸண்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அல்ஹாஜ். S. செய்யது சுலைமான் JCO Ex. Indian Army, இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கல்லூரி தாளாளர் ஜனாப் PNMS காஜா மைதீன் B.E., மீரா கிளினிக் டாக்டர். அப்துல் காசிம் BSMS, 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி. M.M.Y. முகம்மது நயினார் MC, 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்  ஜனாப்.  R. அப்துல் காதர் MC, ஜனாப். S. முகம்மது முஸ்தபா (பைனாப்பிள்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புளியங்குடி நகர்மன்றத் தலைவி திருமதி. S. விஜயா சௌந்திரபாண்டியன் மாணவ/மாணவிகளை வாழ்த்திப் பேசினார். இப்பயிற்சி வகுப்பை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி விரிவாகப் பேசினார். 

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜனாப். T. முகைதீன் அஹமது ஷா M.Sc., M.Ed., M. Phil மற்றும் ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர் ஹாஜி M. சுல்தான் செய்யது இப்ராஹிம் B.Com., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நன்றியுரையோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின்  அழைப்பிதழ் & புகைப்படங்கள்














-------------------------------------------------------------------------------------------

நிகழ்வு -2

76ஆவது குடியரசு தினவிழா

ஹிக்மத் அகாடமியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட 76ஆவது குடியரசு தினவிழா 26-01-2025 அன்று மாலை 5.15மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவி அஃப்ரின் இறைவசனங்களை ஓத விழா இனிதே ஆரம்பமாகியது. மீராசா அஹ்லுஸ் சுன்னத் மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டியின் தலைவர் அல்ஹாஜ். P.N.M. மௌலல் கௌமி M.E., தலைமை தாங்கினார். ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர்கள் ஹாஜிமா. S. சுபைதா பானு M.Sc., M.A., M.Ed., (முன்னாள் தலைமை ஆசிரியை - காயிதேமில்லத் மேல்நிலைப் பள்ளி), ஹாஜி. M. சுல்தான் செய்யது இப்ராஹீம் B.Com., மற்றும் ஜனாப். R. அப்துல் காதர் MC,ஜனாப். A. முஹம்மது அலி, ஜனாப். S. இம்ரான் கான் B.Sc., மௌலவி. K. முஹம்மது முகைதீன் பாகவி, ஜனாப். M. காலிதீன், ஜனாப். A. முகைதீன், ஜனாப். M. முஹம்மது உசேன், ஜனாப். A. அகமது முகைதீன், சமூக ஆர்வலர் ஜனாப். S.லெப்பை முஸ்தபா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஹிக்மத் அகாடமயின் நிர்வாக இயக்குநர் ஹாஜி. A. அபுதாஹீர் வரவேற்புரை ஆற்றினார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஜனாப். A. செய்யது M.Com., நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முன்னதாக ஹிக்மத் அகாடமியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர் M. முஹம்மது சுஹைல் இந்திய சுதந்திர வரலாறு குறித்துப் பேசினார். பேச்சுக்கான குறிப்புகளை தானே தயார் செய்து பேசிய அம்மாணவரை அனைவரும் பாராட்டினர். ஜமாத் தலைவர் அம்மாணவரைப் பாரட்டி சான்றிதழ் வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான சேயன் இப்ராகீம் சிறப்புரை ஆற்றினார். இந்திய சுதந்திர வரலாறு குறித்தும், அதில் நமது சமுதாயத்தின் பங்களிப்பு குறித்தும், மாணவர்கள் இந்திய வரலாற்றிலும், வளர்ச்சியிலும் பங்களிப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினார். வரலாறு குறித்த அவரது தெளிவான பார்வையும், உரையும் நிச்சயம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஹிக்மத் அகாடமியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஜனாப். M.காதர் முகைதீன் M.Com.,B.Ed., ஜனாபா. S. ரிஸ்வானா பாத்திமா B.Sc., ஹிக்மத் அகாடமியின் நூலக ஒருங்கிணைப்பாளர் S. முஹம்மது முஸ்தபா, அன்னை ராபியா அறக்கட்டளையின் அறங்காவலர் A. மைதீன் பாதுஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வளரும் தலைமுறையினருக்கு வரலாற்றை எடுத்துச் சொல்ல இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்றும், ஹிம்கத் அகாடமி இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின்  அழைப்பிதழ் & புகைப்படங்கள்













-----------------------------------------------------------------------------------

நிகழ்வு-1

 ஹிக்மத் அகாடமி தொடக்கவிழா

அன்னை ராபியா அறக்கட்டளையின் ஓர் அங்கமான ஹிக்மத் அகாடமியின் தொடக்க விழா 02-01-2025 வியாழக்கிழமை அன்று ஹிக்மத் அகாடமி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மஸ்ஜிதுல் ஃலம் பள்ளி இமாம் அபுபக்கர் ஹசனி இறைவனங்களை ஓதி தொடங்கி வைத்தார். ஹிக்மத் அகாடமியின் நிர்வாக இயக்குநர் ஹாஜி.அபுதாஹீர் வரவேற்புரையாற்றி வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றார்காடமியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செய்யது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்

புளியங்குடி மேலப்பள்ளிவாசல் ஜமாத் கமிட்டியின் தலைவர் அல்ஹாஜ் மௌலல் கௌமி, ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர் ஹாஜி. சுல்தான் செய்யது இப்ராகீம், நியூ கிரஸ்ண்ட் பள்ளியின் தலைவர் செய்யது சுலைமான், காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியையும் ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகருமான ஹாஜிமா. சுபைதா பானு, வெல்டன் பள்ளியின் முதல்வர் ஜன்னத்துல் பிர்தௌஸ்,  டாக்டர் யூனுஸ்,நகர்மன்ற உறுப்பினர் முகம்மது நயினார், இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கல்லூரியின் தாளாளர் காஜா மைதீன், ஜமாத் கமிட்டி உறுப்பினர் முஹம்மது முகைதீன் பாகவி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இ.மை. அப்துல், சமூக ஆர்வலர் லெப்பை முஸ்தபா மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 


பெற்றோர்களும்,மாணவர்களும் ஹிக்மத் அகாடமியின் செயல்பாடுகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்று அறிவுறுத்தினர். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை ராபியா அறக்கட்டளையின் அறங்காவர் மைதீன் பாதுஷா, ஹிக்மத் அகாடமியின் நூலக ஒருங்கிணைப்பாளர் முஹம்மது முஸ்தபா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


                                                                   நிகழ்ச்சியின்  புகைப்படங்கள்






அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

அன்னை ராபியா பதிப்பகம்

அன்னை ராபியா பதிப்பகம்

பார்வையாளர்கள்