அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி 2015-2016

அன்னை ராபியா நினைவு மாநில அளவிலான சிறுகதைப் போட்டி 2015-2016 பரிசளிப்பு நிகழ்ச்சி

அன்னை ராபியா நினைவு கட்டுரைப் போட்டி - 2016

அன்னை ராபியா நினைவு கட்டுரைப் போட்டி - 2016 பரிசளிப்பு விழா விருது வழங்கும் விழா மற்றும் வாசிப்பு கருத்தரங்கம்

திருநபி மொழியும் இறையருள் வழியும்

அன்னை ராபியா பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்பட்ட திருநபி மொழியும் இறையருள் வழியும் என்ற நூல்

அன்னை ராபியா அறக்கட்டளை நடத்திய கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அன்னை ராபியா அறக்கட்டளை தொடக்கவிழா மற்றும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

Sunday, August 17, 2025

புளியங்குடி ஹிக்மத் அகாடமி நடத்திய சுதந்திர தின விழா மற்றும் P.N.M.முஹம்மது யூசுப் நினைவு கோப்பைக்கான விநாடி வினா நிகழ்ச்சி…

79ஆவது சுதந்திர தின விழா மற்றும் P.N.M முஹம்மது யூசுப் நினைவு கோப்பைக்கான விநாடி வினா நிகழ்ச்சி ஹிக்மத் அகாடமி வளாகத்தில் கடந்த 15-08-2025 அன்று மாலை இனிதே நடைபெற்றது.

இறைவசனங்களோடு இனிதே தொடங்கிய இவ்விழாவிற்கு  ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர் ஹாஜி M. சுல்தான் செய்யது இப்ராஹிம் B.Com., தலைமை தாங்கினார். காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியையும் ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகருமான ஹாஜிமா. சுபைதா பானு M.Sc., M.A., M.Ed., முன்னிலை வகித்தார். மீரா கிளினிக் டாக்டர். அப்துல் காசிம் BSMS அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தனது தந்தை P.N.M முஹம்மது யூசுப் நினைவாக நடத்தப்படும் போட்டியில் இறுதிவரை கலந்து கொண்டு இவ்விழாவிற்கு சிறப்பு செய்தார் 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி. M.M.Y. முகம்மது நயினார் MC  அவர்கள்.

முன்னதாக அகாடமியின் நிர்வாக இயக்குநர் ஹாஜி. A. அபுதாஹீர் வரவேற்புரையாற்றினார்.  செயல்திட்ட இயக்குநர் A. செய்யது B.Com.,          நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நம் முன்னோர்களின் பங்கு, பெற்ற சுதந்திரத்தை எவ்வாறு பேணிக் காக்க வேண்டும்? நாம் அடைய வேண்டிய இலக்குகள் என்னென்ன? என்பது குறித்து விருந்தினர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர்.

அடுத்ததாக மாணவ/மாணவியர் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வரலாறு, இலக்கியம், அறிவியல், பொது அறிவு, நாட்டு நடப்பு, பள்ளிப் பாடம் உள்ளிட்ட தலைப்புகளில் கேள்விகள் தொகுப்பப்ட்டு இவ்விநாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது.

மாணவ/மாணவியர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த  போட்டிகள் மிக அவசியம் என்பதன் அடிப்படையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை புளியங்குடி ஹிக்மத் அகாடமி முன்னெடுத்து வருகிறது.  மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டியில் பங்கு பெற்ற நான்கு குழுக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ/மாணவியர் மிகுந்த உற்சாகத்துடன் இப்போட்டியில் பங்கெடுத்து விடையளித்தாலும் நம் வரலாறு சார்ந்த சில எளிய கேள்விகளுக்குக்கூட அவர்களால் பதில் அளிக்க இயலவில்லை என்பதன் மூலம் மாணவர்களை இன்னும் நிறைய வழிகளில் தயார்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அதன் அடிப்படையில் இதுபோன்ற போட்டிகளையும், பயிற்சிகளையும் ஹிக்மத் அகாடமி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று விழாவிற்கு பிந்தைய ஆசோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகள் விரைவில் தொடர்ந்து வரும் (இறைவன் நாடினால்)...

 

என்றும் கல்விப் பணியில்:

ஹிக்மத் அகாடமி,

புளியங்குடி.

 



















 

 

Share:

Thursday, July 3, 2025

புளியங்குடி ஹிக்மத் அகாடமியின் மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல்

 புளியங்குடி ஹிக்மத் அகாடமியின் மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல்

புளியங்குடி ஹிக்மத் அகாடமி சமீபத்தில் நடத்திய ஒரு நேர்காணலின் போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் எதிர்கால இலட்சியம் குறித்துக் கேட்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் நர்ஸிங் படிக்க வேண்டும் என்றனர். காரணம் மருத்துவத்துறையில் டாக்டர் இல்லையென்றால் நர்ஸ் என்ற இரண்டு படிப்புகள் மட்டுமே உள்ளன என்றே பெரும்பாலான மாணவர்கள் எண்ணுகின்றனர். அவர்களிடம் மெடிக்கல் துறையில் உள்ள மற்ற படிப்புகள் குறித்த அறிமுகமோ, புரிதலோ இல்லை.

+2 முடித்த பிறகு என்னென்ன நுழைவுத் தேர்வுகள் எழுதலாம், என்னென்ன படிப்புகளில் சேரலாம் என்பன குறித்து நிறைய வழிகாட்டுதல்களை ஹிக்மத் அகாடமி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில் மருத்துவம் சார்ந்த 20 பி.எஸ்.சி படிப்புகள் குறித்து டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா எழுதிய கட்டுரை சமரசம் இதழில் வெளிவந்தது. அக்கட்டுரையை நகல் எடுத்து ஹிக்மத் அகாடமி சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

கட்டுரையின் பிரதிகளை ஹிக்மத் அகாடமியின் இயற்பியல் ஆசிரியை அம்பிகா மற்றும் ஹிக்மத் அகாடமியின் செயல்திட்ட இயக்குநர் செய்யது ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர்.

மருத்துத்துறையில் இத்தனை படிப்புகள் இருப்பது இதுவரையில் தெரியாது எனவும், எதிர்காலத்தையும், மேற்படிப்பையும் திட்டமிட இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கட்டுரையைப் படித்த மாணவர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்தனர். ஹிக்மத் அகாடமியின் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இக்கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

https://www.annairabiya.org/p/downloads.html

நன்றி: டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா & சமரசம்

                                                    புகைப்படங்கள்




Share:

+2 மற்றும் SSLC பொதுத்தேர்வில் சாதித்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

 புளியங்குடி ஹிக்மத் அகாடமி நடத்திய +2 மற்றும் SSLC பொதுத்தேர்வில் சாதித்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

கடந்த 24-05-2025 சனிக்கிழமை அன்று ஹிக்மத் அகாடமி வளாகத்தில் இறைஅருளால் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மீராசா அஹ்லுஸ் சுன்னத் மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டியின் தலைவர் அல்ஹாஜ். P.N.M. மௌலல் கௌமி M.E., தலைமை தாங்கினார்.
ஹிக்மத் அகாடமியின் கௌரவ ஆலோசகர் ஹாஜி M. சுல்தான் செய்யது இப்ராஹிம் B.Com., ஜமாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ். A. காஜா முகைதீன், நியூ கிரஸண்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அல்ஹாஜ். S. செய்யது சுலைமான் JCO., Ex.Army, காயிதேமில்லத் பள்ளி தலைமை ஆசிரியை சபூர் பாத்திமா M.Sc.,M.Phil.,B.Ed., 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி. M.M.Y. முகம்மது நயினார், அல்மாஸ் கன்ஸ்ட்ரக்சன் A. செய்யது அலி, ஹிக்மத் அகாடமி நூலக ஒருங்கிணைப்பாளர் S. முகம்மது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தென்காசி நகர்மன்றத் தலைவர் ஜனாப் R. சாதிர், மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர். அப்துல் காதிர் M.Sc., M.Phil., PGDCA., Ph.D.,. ஆகியோர் மாணவர்களை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் சிறப்புரையாற்றினர்.
நன்றியுரையோடு விழா இனிதே நிறைவு பெற்றது.
மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோர்கள் மகிழ்வுடன் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். படிக்கும் மாணவ/மாணவியருக்கு ஊக்கமும், பாராட்டுதலும் மிக அவசியம். அந்த வகையில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தவர்களுக்கு நமது நகரில் ஹிக்மத் அகாடமி பரிசளித்து பாராட்டியது வரவேற்கத்தக்க விஷயம் என்றும், இதுபோன்ற செயல்பாடுகளை ஹிக்மத் அகாடமி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என கல்வியாளர்களும், சமூக சிந்தனையாளர்களும் கருத்து தெரிவித்தனர்.
சொந்த ஊரில் இதுபோன்ற பாராட்டுதல்களும், ஊக்கமும் கிடைக்க்பெறுவது தொடர்ந்து சாதிப்பதற்கு ஊக்கம் தருவதாக பரிசு பெற்ற மாணவ/மாணவியர் கருத்து தெரிவித்தனர்.

                                    நிகழ்ச்சியின் அழைப்பிதழ் & புகைப்படங்கள்
































Share:

கோடைகால SPOKEN ENGLISH பயிற்சி - 2025

மேற்படிப்புகளிலும், பணியிடங்களிலும் சாதிப்பதற்கு ஆங்கில அறிவு மிக அவசியம். இதனை கருத்தில் கொண்டு புளியங்குடி ஹிக்மத் அகாடமி கட்டணமில்லா கோடைகால SPOKEN ENGLISH பயிற்சி வகுப்புகளை நடத்தியது. சுமார் 45 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் 40 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம் பற்றியும், ஆங்கிலத்தில் எப்படி பேச வேண்டும் என்பது குறித்தும் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களிடத்தில் இயல்பாக இருக்கும் தயக்கங்களை உடைத்து  அனைவரின் முன்னிலையிலும் எந்தவித தயக்கமும் இன்றி இயல்பாக பேசும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் நூற்றுக்கணக்கான புதிய ஆங்கிலச் சொற்களை அதன் அர்த்தத்துடன் அறிந்து கொண்டனர். 

பயிற்சி வகுப்பின் இறுதியில் சிறப்பான முறையில் இப்பயிற்சி வகுப்பினை பயன்படுத்திக் கொண்டு நன்கு ஆங்கிலத்தில் பேசிய மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு கோப்பையும், பதக்கமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஹிக்மத் அகாடமி ஏற்பாடு செய்த இப்பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், ஆங்கிலம் மீது இருந்த தயக்கமும், ஒருவித பயமும் விலகி எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைத் தந்ததாக மாணவ, மாணவியர் கருத்து தெரிவித்தனர். 

                                                                            புகைப்படங்கள்



















Share:

Annai Rabiya Trust

Hikmath Academy

Discovery Training Institute

Annai Rabiya Publication

பார்வையாளர்கள்